‘அவசரக்காரனுக்கு புத்தி மத்திமம்’ என்பதால் விவேகமே உசிதமாகும்

மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலைமையே காணப்படுகின்றது என்பது, ஒவ்வொரு நாளும் இடம்பெறுகின்ற வீதி விபத்துகளின் ஊடாக அவதானிக்க முடிகின்றது. 24 மணிநேரத்துக்குள் ஆகக் குறைந்தது 10 உயிர்களை வீதி விபத்துகள் காவுகொண்டுவிடுகின்றன.