பெண் குழந்தையின் கை அகற்றப்பட்டமை தொடர்பில்

(Ramanathan Lambotharan)

மிக நியாயமான விளக்கம். விசாரணை பாரபட்சமின்றி நடக்கும் வாய்ப்பு அரிது என்பது முதலில் இருந்தே கவனிக்கக்கூடியதாக உள்ளது. Cannula போடப்பட்டதால் கை அகற்றவேண்டி வந்தது என்பதும் antibiotic மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட வேண்டி வந்தது என்பதும் மருத்துவ ரீதியாக நம்ப்பக்கூடியதாக இல்லை. கையுக்கு இரண்டு வேறுபட்ட radial artery, ulnar artery என்ற இரத்தக்குழாய்களினூடாக குருதியோட்டம் வருவதாலும், அவை இரண்டும் வட்ட வடிவமாக இணைந்து கிளைத்து இரத்தோட்டத்தை வழங்குவதாலும் ஊசி தறுதலாகப் போட்டு ஒரு இரத்தக்குழாய் பாதிக்கப்பட்டது என்று ஒரு கதைக்காக எடுத்துக்கொண்டாலும் இரத்தோட்டம் துண்டிக்கப்பட முடியாது.
ஒவ்வொரு சம்பவத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் தாதிய உத்தியோகத்தரின் தன்னிலை விளக்கம்..