விவசாயிகளைப் பந்தாடும் யானைகள்

(க. விஜயரெத்தினம்)

“மனிதர்களின் வாழ்வுரிமையை யானைகள் பறிக்கின்றன. ஆனால், யானைகளைத் துன்புறுத்துவதும் கொல்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். வெடிகள் போன்றவற்றுக்கு யானைகள் பழக்கப்பட்டு இருப்பதால் இவற்றை விரட்ட வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது. பனை ஓலைகளில் நெருப்பை கொளுத்தி எறிந்தால், யானைகள் மிரண்டு ஓடி விடும்” என்று தனது அனுபவத்தில் கண்டு கொண்டதை விவரித்தார் அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த ஓய்வு நிலை பிரதி அதிபரும் விவசாய ஆர்வலருமான எஸ். தில்லையம்பலம்.