அதிவிசேட வர்த்தமானி வெளியானது

ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கும் வகையில் அதி விசேட வர்த்மானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி ஊடாக, ஜனாதிபதியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.