அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், குறித்த விடயம் தொடர்பில் பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்தினார்:
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நிலைமை சீரடைந்துள்ளதன் காரணமாக, அவசரகாலச் சட்டத்தை இம்மாதத்துடன் முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இம்மாத இறுதியில் இந்த அவசரகால ஒழுங்குவிதிகள் தானாகவே காலாவதியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.