’ஆட்சி மாற்ற சதி’: ஜோ பைடனுக்கு இம்ரான் சவால்

பிடிஐ ஆட்சியை கவிழ்த்ததன் மூலம், பாகிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு உணர்வை அதிகப்படுத்தியதாகவா அல்லது குறைத்ததாகவா நினைக்கிறீர்கள் என்று அவரிடம் இம்ரான் கேள்வியெழுப்பினார்.

அமெரிக்க பாதுகாப்பு ஆய்வாளரின் வீடியோவையும் வெளியிட்ட இம்ரான் கான், இது தனது அரசாங்கத்தை கவிழ்ப்பதன் பின்னணியில் உள்ள அமெரிக்க நிகழ்ச்சி நிரல் பற்றிய அவரது கூற்றை உறுதிப்படுத்துவதாக தொடர்ச்சியான டுவீட்களின் மூலம் கூறினார்.

அதிகாரத்தில் இருந்த காலத்தில் தனக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லாததால், பைடன் நிர்வாகம் “ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை அகற்றுவதற்கான ஆட்சி மாற்ற சதியில்” ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் இம்ரான் குற்றம் சாட்டினார்.  

வெளியேற்றிய பின்னர் அரசாங்கம் “ஊழல்காரர்களிடம்” ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் அமெரிக்கக் கொள்கைகளைப் பின்பற்றுவார்கள் என்றும் சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவுகளை மட்டுப்படுத்துவார்கள் என்றும் அவரது கட்சியின் முக்கியக் குழுவின் கூட்டத்தை நடத்திய பின்னர் அவர் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் உக்ரைனை ஆதரிக்க வேண்டும், ரஷ்யாவுடனான ஒப்பந்தங்களைத் தேடுவதை நிறுத்த வேண்டும் மற்றும் சீனாவுடனான அதன் ஈடுபாட்டைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் டொக்டர் ரெபேக்கா கிராண்ட், ஃபொக்ஸ் நியூஸின் வீடியோவைப் பற்றி இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கோதுமை மற்றும் பெற்றோலியப் பொருட்களை 30 சதவீதம் குறைவான விலையில் விற்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் இதனால் பாகிஸ்தான் மக்களுக்கு சுமை குறையும் எனவும் கான் கூறினார்.

புதிய பிரதமர், அமெரிக்காவின் கொள்கைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டதாகவும், அவர் நடுநிலையாக இருக்க மாட்டார் என்றும் ஆய்வாளர் கூறியுள்ளதாக இம்ரான் சுட்டிக்காட்டினார்.

“அவர்கள் எங்களுக்கு எதிராக அவதூறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர், ஆனால் உண்மை என்னவென்றால் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். பாகிஸ்தானின் சுதந்திரத்துக்காக மக்களை வீடுகளை விட்டு வெளியே வருமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.