’இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும்’

இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியுமென், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். கிளிநொச்சி ஊடக மையத்தில், இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இப்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழரசு கட்சி தனித்து பயணிக்கக்கூடியதான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாதக பாதக நிலை தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர் வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதில் ஒரு நன்மை இருப்பதாகவும் இதனுடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் எனவும் கூறினார்.