இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 40  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 22 ஆண்களும் 18 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை13,059 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 28 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 11 பேரும் 30 வயதுக்குட்பட்டவர்களில் ஒருவரும் மரணித்துள்ளனர்.

பல்வேறு காரணங்களுக்காக நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட 85,000 பேருக்கு எந்தவிதமான கொரோனா தடுப்பூசியும் வழங்கப்படவில்லை என்று கொவிட் தடுப்பு செயலணி தகவல் வெளியிட்டுள்ளது. கொவிட் தடுப்பூசி போடப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட இவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்கள் என்றும் அந்த எண்ணிக்கை 20,000 என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது ஆபத்தான நிலை என்று சுகாதார துறையின் பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசி போடுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.