மாபெரும் போராட்டத்து ஆசிரியர்கள் முஸ்தீபு

ஆசிரியர் தினமான ஒக்டோபர் 6ஆம் திகதியன்று, மாபெரும் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக,இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 312 பிரதேச கல்வி அலுவலகங்களின் அடிப்படையில், இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எந்த இடையூறுகள் வந்தாலும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், அவர் கூறினார்.