இலங்கை: கொரோனா தகவல்

நாட்டில் மேலும் 539 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 739ஆக அதிகரித்துள்ளது. கம்பஹா பொதுசந்தையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (10) 75ஆக அதிகரித்துள்ளது. தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.