இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

கோட்டாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதாக உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு தனது வாழ்த்துகளை சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கூடவே ஐதே கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து ராஜினமா சஜித்செய்துள்ளார். தமிழ் பிரதேசம் எங்கும் தனது வெற்றியை உறுதி செய்த சஜித் பிரேமதாச சிங்களப் பகுதிகளில் அதனை உறுதி செய்ய முடியவில்லை. தமிழ் பகுதிகளில் கோட்டபாய பெற்ற மிகக் குறைவான வாக்குகள் தமிழ் மக்களின் எண்ணைக் கருத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இதே வேளை அனுர குமார திசநாயக்க விற்கு கூடிய கூட்டம் அவருக்கான ஆதரவான வாக்குகளாக மாறவில்லை என்பதையும் உணர முடிகின்றது