இலங்கை பொருளாதார நெருக்கடி: ராஜபக்சே குடும்பத்தின் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து இப்படியொரு பொருளாதார நெருக்கடியை சந்தித்ததே இல்லை என்றுதான் உலக ஊடகங்கள் அனைத்துமே விமர்சிக்கின்றன. அந்த அளவுக்கு மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இனியும் பொறுக்க முடியாது என்ற கோபத்துடன் மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிடத் தொடங்கினர். அடுத்தடுத்து இரண்டு நாட்களும் போராட்டம் நடைபெற இரவோடு இரவாக அவசரநிலையை பிரகடன்ப்படுத்தியுள்ளது இலங்கை அரசு. இப்போதும் நாடு தழுவிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.