ஈரான் மீது அமெரிக்க இராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. அப்போது ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் நேற்று திடீர் தாக்குதல்களை நடத்தியது. குறிப்பாக ஈரானின் முக்கிய ஏவுகணை தளங்கள் அழிக்கப்பட்டன. மேலும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்ணிவெடிகளை வீசிக் கொண்டிருந்த ஈரான் இராணுவ படகுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.