ஈரான் அதியுயர் தலைவர் காமெனி உயிரிழந்தார்

ஈரானின் அதியுயர் தலைவர் அயோதுல்லா அலி காமனெ உயிரிழந்ததை அந்நாட்டு தஸ்னிம், பார்ஸ் செய்தி முகவரகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காமனெ கொல்லபட்டதையடுத்து 40 நாள்கள் துக்கத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பார்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதுடன், 7 நாள்கள் அரச விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.  காமனெவுக்கு உரிய பணிகளை அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை (28) அதிகாலையில் ஆற்றிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்டதாக பார்ஸ் கூறியுள்ளது.