மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ரோஹந்த அபயசூரிய மற்றும் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தமது வாய்மூல சமர்ப்பணங்களை முன்வைக்கத் தொடங்கினார்.