உ/த பரீட்சை ஜனவரி ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையை 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்தார். தற்போதைய பேரிடர் சூழ்நிலை காரணமாக, க.பொ.த உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்து திட்டமிடப்பட்ட தேர்வுகளையும் கல்வி அமைச்சு முன்னதாக காலவரையின்றி ஒத்திவைத்தது.