எல்லை நிர்ணய சபையின் அறிக்கை விரைவில்

தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியாக பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலனை செய்ததன் பின்னர் இந்த பணி இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் எல்லை நிர்ணய சபையின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.