கடுமையான வெப்பநிலை குறித்த எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் அதி வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த  இடங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை’ நிலை வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நாளை பிற்பகல் 2.30 மணி வரை அமலில் இருக்கும்.