கனடா தலைநகரைக் கைப்பற்றினோம்: பொலிஸார்

குப்பைகளையும், பனியையும் அகற்றி வீதிகளை நகரப் பணியாளர்கள் சுத்தப்படுத்திய நிலையிலேயே பொலிஸாரின் குறித்த கருத்து வந்துள்ளது.

இரண்டு நாள்கள் பதற்றமான மோதல்களையடுத்தும், 191 கைதுகளையடுத்தும், ஒட்டாவாவின் மூன்று வார முற்றுகை முடிவுக்கு வந்திருந்தது.

இவ்வாண்டு ஜனவரி 28ஆம் திகதி முதல் நூற்றுக்கணக்கான ட்ரக்கள், வாகனங்களைப் பயன்படுத்து ஒட்டாவாவை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கிய நிலையில், அரிதாகப் பயன்படுத்தப்படும் அவசரகால அதிகாரங்களை கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயன்படுத்தியிருந்தார்.