கன மழை: துபாய் விமானங்கள் இரத்து

இதனால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. ஓமனிலும் மழை பெய்ததில் 18 பேர் பலியாயினர். இந்த மழை பெய்து 2 வாரங்கள் ஆன நிலையில் துபாயில் நேற்று மீண்டும் மழை பெய்தது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக விமான சேவை, நகரின் மெட்ரோ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு புறப்படும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக எமிரேட் ஏர்லைன்ஸ் நிறுனம் அறிவித்துள்ளது.