கன மழை: துபாய் விமானங்கள் இரத்து

ஐக்கிய அரபு எமிரேட்டில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததால் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பாலைவன நகரமான துபாயில் கடந்த மாதம் 14ஆம் திகதி கன மழை கொட்டி தீர்த்தது. 75 ஆண்டுகளில் இல்லாத வகையில் பலத்த மழை பெய்தது. ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரே நாளில் பெய்ததால் துபாயில் உள்ள விமான நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.