கவனயீர்ப்பு பேரணி

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் மற்றும் மல்லிகைத்தீவில் இயங்கிவரும் சிறுவர்களின் போசாக்கு அபிவித்தி நிலையம்  ஏற்பாட்டில் இந்த கவனீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரசேத சபை முன்பாக இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி ஒன்றும்  மல்லிகைத்தீவு பகுதியில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் புதுக்குடியிருப்பு சந்தியினை சென்றடைந்து அங்கிருந்து கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியவாறு  பிரதேச செயலம் சென்றடைந்து அங்கு சிறுவர்களின்  பாதுகாப்பினை உறுதி செய்யகோரியான கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இதில் சுமார் 500 வரையான சிறுவர்கள் பெரியவர்கள் வரை கலந்து கொண்டுள்ளார்கள்.