காணாமல் போன படையினர் கரை திரும்பினர்

6 கடற்படையினருடன் காணாமல் போன கடற்படையின் கப்பலொன்று பானம முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது  என  கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 16ஆம் திகதி கடலில் ரோந்து பணிகளில்  ஈடுபட்டிருந்த போது குறித்த கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக  அக்கப்பலுடன் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர்.