காஷ்மீரில் 68 ஆயிரம் மக்களை கொன்ற நாடு ஜனநாயக நாடா? – அருந்ததி ராய் ஆவேசம்!

டெல்லியில் காஷ்மீருக்கு சுதந்திரம் தான் ஒரே வழி என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு பெற்ற புகழ் பெற்ற எழுத்தாளருமான அருந்ததி ராய் உரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு முன்னதாக காஷ்மீரிகளின் மூத்த தலைவரான சையத் அலிஷா கிலானி மீது வெறியர்கள் சிலர் காலணி வீசி ரகளை செய்தனர். அதனை முன்னதாக குறிப்பிட்ட அருந்ததி ராய், என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுதே எறிந்து கொள்ளுங்கள் எனக் கூறியவாறு தனது உரையைத் தொடங்கினார். காஷ்மீரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தை இந்திய காலனி ஆதிக்கம் பிடித்துக் கொண்டது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அல்ல.

காஷ்மீர் ஒருபிரச்சனைக்குரிய பகுதி தான் என்பதை ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 68 ஆயிரம் கஷ்மீரிகளைக் கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை. குஜராத்தில் 2500 முஸ்லிம்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கும் மதசார்பற்ற நாடு என்றுகூற தகுதியில்லை.

வல்லமை மிகுந்த இந்திய ராணுவத்தினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபடும் கஷ்மீர் இளைஞர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பார்த்து ராயல் சல்யூட் செய்யாமலிருக்க முடியவில்லை என அருந்ததிராய் நிகழ்த்திய உரை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது