கைதி மரணம்: மூன்று அதிகாரிகள் பணிநீக்கம்

குறித்த சிறைச்சாலைக்குப் பொறுப்பான சிறைச்சாலை அதிகாரி, காவலர் மற்றும் சார்ஜன்ட் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை இந்த மூன்று அதிகாரிகளின் பணி இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் எனவும் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

உயிரிழந்த கைதியின் மகளை தொலைபேசியில் அழைத்து மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கைதியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஏகநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலை அதிகாரிகளால் கைதி அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் உதவி அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.