கோட்டாவை நீச்சல் தடாகத்தில் தேடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

போராட்டத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிப்பதுடன், அதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட போது, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில், அந்தக் கூட்டத்துக்கு செல்லாமல் இருக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.