ரணிலின் அழைப்பை நிராகரித்தார் சஜித்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கமைய இன்று மாலை 4 மணியளவில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டவுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறவித்திருந்தார். இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். எந்தவொரு சட்டபூர்வமான தன்மையும் இல்லாது பதவி வகிக்கும் பிரதமரின் கூட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி செல்லாது என்றும் சஜித் அறிவித்துள்ளார்.