கோட்டா உள்ளே: ரணில் வெளியே

நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அனைவருக்கும் எதிராக கடுமையான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் மனுக்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம், இன்று (27) உத்தரவிட்டது.