சஜித்தின் கோரிக்கை நிராகரிப்பு?

நான்கு நிபந்தனைகளின் கீழ் தான் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்பதாக தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் ஜனாதிபதிக்கு இன்று பகல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்கட்சித் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த காலத்திற்குள் பதவி விலகுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.