சஜீத் அணியில் நால்வர் இணைந்தனர்

பாராளுமன்றில் சுயாதீன உறுப்பினர்களாக செயற்பட்ட நால்வர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரகடனப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு பின்னர் சுயாதீன உறுப்பினர்களாக இவர்கள் செயற்பட்டனர். அநுர பிரியதர்ஷன யாப்பா, சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே, சந்திம வீரக்கொடி மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோரே இவ்வாறு இணைந்துகொண்டனர்.