தமது வீடுகளுக்கு செல்லும் 47 இந்திய மீனவர்கள்

சிறையில் அடைக்கப்பட்ட 56 மீனவர்களும் கடந்த மாதம் 25ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.  விடுதலை செய்யப்பட்ட இந்த 56 மீனவர்களில் 9 மீனவர்கள் மட்டும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு கொழும்பில் இந்திய தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 47 மீனவர்களும் இன்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.