தலிபான்களுக்கு எதிராக தேசியக்கொடி ஏந்தி போராட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததை அடுத்து மூன்று  ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்கள் தலிபான்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நாடு தலிபான்களின் கைகளில் வீழ்வதை எதிர்த்தே பொதுமக்கள் வீதிகளில் இறங்கினர்.