‘பெரு’ நாட்டிலும் வெடித்தது மக்கள் போராட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேவகையில், பெரு நாட்டிலும் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், சுங்க கட்டணம் விலை உயர்வு உள்ளிட்டவற்றை எதிர்த்து மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். இதனால் அங்கும் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.