சுமார் 72.2 மில்லியன் (ஏழு கோடியே இருபத்தி இரண்டு லட்சம்) ரூபாய் பெறுமதியான ‘ஹஷீஷ்’ (Hashish) மற்றும் ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கடத்தி வந்த 5 இலங்கை பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (28) அன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.