போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’

காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்தப்போராட்டம் தற்போது காலி முகத்திடலில் ஒரு சிறு நிலத்தில் இடம்பெறுவதற்கு மாறாக பரந்த அரசியல் வெளியில் நடைபெறுவதாகவும் அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்தில் அடையாள வெற்றிகள் கிடைத்துள்ளதாகவும் தொடர்ந்தும் அங்கிருந்து போராட வேண்டிய அவசியமில்லை எனவும் ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.