மணித்தியாலத்துக்கு 32 பேர் பறக்கின்றனர்

புதிய அறிக்கைகளுக்கு அமைய இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் 32 இலங்கை பிரஜைகள் வெளிநாடு செல்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.