மஹர சிறைச்சாலைக்குள் ஒருவித அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நிலைமையை ஆராய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சூழவுள்ள பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். கைதிகள் பதிவுப் பிரிவு மற்றும் கைதிகள் ஒழுக்காற்றுப் பிரிவு ஆகியவற்றுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.