’மினுவாங்கொடை கொத்தணி உக்ரேன் பிரஜையிடம் ஆரம்பம்’

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உக்ரேனிலிருந்து வருகை தந்த விமான ஊழியரால் ஏற்பட்டது என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர், மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நாடாளுமன்றில் இன்று (07) இதனைக் கூறியுள்ளார்.