மொட்டுடன் இணையாதிருக்க தீர்மானம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையாமல் இருப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்துக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அநுராதபுரத்தில் இன்று (29) இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் கூறியிருக்கின்றார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பின்னடைய செய்வதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.