யாழில் மாபெரும் சைக்கிள் பேரணி

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக் கோரி யாழில் சைக்கிள் பேரணி ஒன்று யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து யாழ். நகர் நோக்கி இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது.  குறித்த பேரணி யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சென்று , அங்கு கூடி கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.