வெடி கொளுத்திய கல்முனை வர்த்தகர்கள்

அம்பாறை  – கல்முனை பிரதான வீதியில் இன்று பட்டாசு வெடிக்க வைத்து, போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இவ்வாறு பட்டாசு கொழுத்தப்பட்டது. இந்த போராட்டத்தினை கல்முனை  சேர்ந்த இளம் வர்த்தகர்கள்  இணைந்து முன்னெடுத்ததுடன், ஜனாதிபதி கோட்டபாய உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என கோஷம் எழுப்பினர்.