’யுக்திய’வில் இதுவரையில் 13,666 பேர் கைது

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையான ‘யுக்திய’ சுற்றிவளைப்பு திட்டத்தின் போது 13,666 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.