வடக்கின் புதிய ஆளுநராகிறார் ஜீவன்?

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் கையொப்பமிட்டு ஜீவன் தியாகராஜாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.   தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியை விரைவில் அவர் இராஜினமா செய்வார் என்றும் அறிய முடிகிறது.