வடக்கு கொள்ளையர்கள் சிக்கினர்

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கிளடம் இருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள், 2 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர், வடக்கு மாகாணம் முழுவதிலும் பதுங்கியுள்ளனரென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவரெனவும், ஏனையோர் சிறுப்பிட்டி, சுன்னாகம், அச்சுவேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும், விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பல் வடக்கு மாகாணம் முழுவதும் இயங்குகிறதெனத் தெரிவித்த பொலிஸார், ஒவ்வொரு மாவட்டத்திலும் 3, 4 பேர் உள்ளனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தத்தமது இடங்களில் கொள்ளைகளில் ஈடுபடுவதாகவும் கூறினர்.

சந்தேகநபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில், நேற்று (29) இரவு முற்படுத்தப்பட போது, அவர்களை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு மன்று உத்தரவிட்டுள்ளது