வடமத்தியை மஹிந்த கைப்பற்றுவார்?

வடமத்திய மாகாண சபையில் பெரும்பான்மையானோர் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, இது தொடர்பில் வடமத்திய மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவிக்க அவர்கள் தயாராக உள்ளனர். மேலும், வட மாகாண சபையில் 33 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 21 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஆவர். மிகுதி 11 பேர் ஐக்கிய தேசிய கட்சியையும் மேலும் ஒருவர் ஜே.வி.பியையும் பிரதிநிதித்தவப்படுத்துபவர்கள் ஆவர். இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களில் 17 பேர் ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு வழங்கி தனித்து செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.