வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சென்னை நகரின் எழும்பூர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வெள்ளத்தில்  மிதக்கின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சில பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டார்.