ஹட்டனில் 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்பு அழிப்பு

ஹட்டன், கொட்டகலை நகரில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்புத் தொகையை, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (09) குறித்த மஞ்சள் பருப்புத் தொகையை ஹட்டன் மாவட்ட நீதவான் மற்றும் மேலதிக நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவற்றை அழிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply