ஹரியானாவில் தொடரும் விஎச்பி கலவரம்!

ஹரியானா மாநிலத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் கும்பல் தூண்டிவிட்ட மதக் கலவரம் புதன்கிழமையன்றும் தொட ர்ந்தது. இது தலைநகர் தில்லிக்கும் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. விஎச்பி-யின் மத வன்முறைக்கு, ஏற்கெனவே 5 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், புதனன்று மேலும் ஒருவர் பலி யானார். இதுவரை நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 2 போலீசார், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புக்கள் நடத்தும் பேரணிகளால் வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று உ.பி, ஹரியானா, தில்லி மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.