21ஆவது திருத்தத்துக்கு அங்கிகாரம்

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரம் பெற்றக்கொள்ளப்பட்டது. சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த திருத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதுடன், இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கவோ அல்லது எதிர்காலத் தேர்தலில் போட்டியிடவோ முடியாது என்ற சரத்து திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.