NTJ அமைப்புடன் நேரடி தொடர்புடைய 8 பேர் கைது

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் நேரடி தொடர்புடையவர்களெனக் கருதப்படும் 8 பேரை குருநாகலில் வைத்து கைது செய்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேலும் 108 பேரை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, குறித்த நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ராஜகிரிய – நாவல வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் கசட்டுகள் சிலவற்றுடன் மௌலவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 14 கசட்டுகளளும், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் புகைப்படங்கள் மற்றும் அலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.